திருச்சி:-
திருச்சி அருகே குளத்தில் மூழ்கி இரட்டை பிறவி சகோதரிகள் 2பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம்.மினிக்கியூர் அருகேயுள்ள மகிளிபட்டியை சேர்ந்தவர் மணி என்ற அழகப்பன்.
விவசாயி - இவரது இரட்டை குழந்தைகள் ரமணி ( 18 ) மற்றும் லெட்சுமி (18) ஆகிய இருவரும் தனது தாயார் வளர்மதியுடன் மகிளிபட்டி குளத்தில் குளிக்கச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர். தாயாரின் அழுகுரலை கேட்டு, ஓடி வந்த கிராமத்தினர் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கி ஆழத்தில் சென்ற இருவரையும் உயிரிழந்த நிலையில் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதில் ரமணி தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி எஸ் சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லெட்சுமி +2 முடித்துவிட்டு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இருவரது சடலங்ளும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரட்டை இளம் சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments