சென்னை :
தமிழகத்தில் 'டிக் டாக்' செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
‘டிக் டாக்’ எனப்படும் மியூசிக் செயலியில் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவ-மாணவிகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தா லும், சிலரின் வீடியோக்கள் ஆபா சமாகவும் அபாயமானதாகவும் உள்ளன.
இவற்றை தணிக்கை செய்வதற்கான சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லாததால் கட்டுப்பாடு இல்லாமல் இது போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் 'டிக் டாக்' செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, ஆபாசமாகவும் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள 'டிக் டாக்' செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் மணிகண்டன், புளுவேல் கேமை போன்று டிக் டாக்கையும் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.
0 comments