இங்கிலாந்து:-
இங்கிலாந்து நாட்டில் 'பிரெக்ஸிட்' ஒப்பந்தம் ஏற்கனவே 3 முறை தோல்விகளை சந்தித்துள்ளது.இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் தெரசா மேவின் கோரிக்கையை அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற காலக்கெடு அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வரும் ஜூன் மாதம் 3-ந் தேதி 'பிரெக்ஸிட்' ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 'பிரெக்ஸிட்' ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்புகளில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதால் தற்போது நடைபெறவுள்ள வாக்கெடுப்பு தெரசா மேவுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் தோல்வியை சந்தித்தால், இங்கிலாந்து ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments