சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்துள்ள ஐயப்ப பக்தர்கள் கூடுதல் நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த ஆண்டு மண்டல பூஜை காலம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி நடப்பு ஆண்டில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு நவம்பர் 1ஆம் தேதியான நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்குமான தரிசன முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஐயப்ப பக்தர்கள் சீசன் காலங்களில் கூடுதலான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட இந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும் மருத்துவ காப்பீடு அட்டையும் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குளிப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments