• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home ஆன்மீகம்

கோவில் சொத்தை அபகரிக்கக் கூடாது என்ற உணர்வு மறைந்து விட்டது: ஐகோர்ட்

Namadhu TV by Namadhu TV
December 31, 2022
in ஆன்மீகம்
0
முதலமைச்சரை முழுமையாக நம்புகிறோம் – ஸ்ரீமதியின் தாய் பேட்டி..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதலால், கோவில் சொத்தை அபகரிக்கக் கூடாது என்ற அச்ச உணர்வு மறைந்து விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், சித்தி கணேசர் நடராஜ பெருமாள், துர்கை அம்மன் கோவில்கள் உள்ளன. கோவிலை பராமரிப்பதற்காக, பக்தர்களிடம் பெறப்பட்ட நன்கொடை வாயிலாக, வளாகத்தில் திருமண மண்டபத்தை, அறங்காவலர்கள் கட்டினர். வாடகை பணத்தை, கோவில் பராமரிப்புக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கோவிலையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க, நிர்வாக அதிகாரியை, 1995ல் அறநிலையத் துறை நியமித்தது. கோவில் சொத்துக்களை, பரம்பரை அறங்காவலர்களும் கவனித்து வந்தனர்.

திருமண மண்டபத்தின் வாயிலாக கிடைத்த வருவாயை, கணக்கில் கொண்டு வரவில்லை; கோவில் வசம் ஒப்படைக்கவில்லை என புகார் வந்ததை அடுத்து, ஆவணங்களை ஒப்படைக்கும்படி, ஜீவானந்தம் என்பவருக்கு, நிர்வாக அதிகாரி கடிதம் அனுப்பினார்; அதற்கு பதில் இல்லை.

இதையடுத்து, கோவில் சொத்துக்களை நிர்வகிக்க உரிமை உள்ளதாகவும், திருமண மண்டபத்தை ஒப்படைக்கவும் உத்தரவிடக் கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில், நிர்வாக அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சிவில் நீதிமன்றம், கோவில் சார்பில் வழக்கு தொடர நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்றும், நிவாரணம் பெற கோவிலுக்கு உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு அளித்தது.

latest tamil news

சிவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஜீவானந்தம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:

கோவிலுக்கு தானமாக சொத்துக்களை மக்கள் வழங்கி உள்ளனர். சொத்துக்கள் வாயிலாக பெரிய அளவில் வருவாய் வராததால், நிலங்களில் பயிர் செய்வதற்கு, அறங்காவலர்கள் அனுமதி வழங்கினர். வாடகையை வழங்க தவறினாலும் கூட, அவர்களின் பொருளாதார பின்னணி, கோவிலுக்கு செய்த சேவையை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடும் போக்கு இருந்தது.

பொதுவாக, கோவில் சொத்துக்களை அபகரிக்கக் கூடாது என்ற அச்ச உணர்வு மக்களிடம் இருந்தது. தற்போது, மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல் காரணங்களால், அந்த உணர்வு மறைந்து விட்டது. வீட்டுமனைகளாக, வணிகக் கட்டடங்கள், விவசாய நிலங்கள் என கோவில் சொத்து எதுவாக இருந்தாலும், குற்ற உணர்வே இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அதனால், கோவிலுக்கு வருமானம் வருவது இல்லை.

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை நிர்வாக அதிகாரிக்கு இருக்கும்போது, அதற்காக வழக்கு தொடரும் பொறுப்பும் உள்ளது. எனவே, நிர்வாக அதிகாரி தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது தான்.

சொத்துக்களை மீட்பதற்கு, நிர்வாக அதிகாரிக்கு உரிமை உள்ளது. மேல்முறையீடு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: featuredஅரசியல்ஆன்மீகம்இந்தியாசென்னைசென்னை உயர்நீதிமன்றம்தமிழ்நாடு

Related Posts

அருள்நகர் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழா..!
ஆன்மீகம்

அருள்நகர் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழா..!

January 21, 2023
தஞ்சை பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்!
ஆன்மீகம்

தஞ்சை பெரிய நந்திக்கு ஆயிரம் கிலோ காய், கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்!

January 16, 2023
நெற்றியில் விபூதி இன்றி வெளியான வள்ளலார் படம் – அறநிலையத்துறைக்கு ஆன்மீக பக்தர்கள் எதிர்ப்பு!
ஆன்மீகம்

நெற்றியில் விபூதி இன்றி வெளியான வள்ளலார் படம் – அறநிலையத்துறைக்கு ஆன்மீக பக்தர்கள் எதிர்ப்பு!

January 7, 2023
Next Post
4,400 கோடிக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சவுதிஅரேபியா அணி.

4,400 கோடிக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சவுதிஅரேபியா அணி.

கருஞ்சிறுத்தை வடிவில் பிரம்மாண்ட 2023 NEW YEARகேக்.. ஆர்வத்துடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச்செல்லும் மக்கள்.

கருஞ்சிறுத்தை வடிவில் பிரம்மாண்ட 2023 NEW YEARகேக்.. ஆர்வத்துடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச்செல்லும் மக்கள்.

கச்சத்தீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள்..! தமிழக அரசு அறிவிப்பு..!

தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை - தமிழக அரசு

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நேட்டோ  அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்..! ரஷ்யா எச்சரிக்கை..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்